Categories
மாநில செய்திகள்

தச்சர், கொல்லர் பணியில் ஈடுபடுவோருக்கு ஊதியம் நிர்ணயம்…. தமிழக அரசு அரசாணை….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் தச்சர், கொல்லர் பணியில் ஈடுபடு வோருக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி மற்றும் ஊராட்சி களின் பணிபுரிவோருக்கு தனித்தனியே குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாகவும், குறைந்தபட்ச ஊதியம் கட்டாயம் தரப்பட வேண்டும் எனவும் ஆண் பெண் என ஊதியத்தை பிரிக்கக் கூடாது எனவும் கூறியுள்ளது.

Categories

Tech |