தூத்துக்குடி மாவட்ட குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தசரா விழா விமர்சனையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விரைவில் தசரா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் தசரா விழா குறித்து மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில், இந்த தசரா விழாவில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஏராளமான பணம் செலவழித்து சென்னை, மும்பையில் இருந்து நடன பெண்கள், துணை நடிகைகள், சின்னத்திரை நாடக நடிகர்களை அழைத்து வந்து பக்தர்களிடம் சினிமா பாடல்களுக்கு நடனமாட செய்கின்றனர். இதனால் இந்த விழாவிற்கு வரும் பக்தர்களின் மனம் புண்படுகிறது. அதனைத் தொடர்ந்து இந்த நடிகர் அரைகுறை ஆடைகளுடன் ஆடுவது பக்தர்களின் மீதான நன்மதிப்பை பிற மதத்தினரிடம் குறைகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டில் ஆபாச நடனத்திற்கு ஹைகோர்ட் தடை விதித்தது. இருப்பினும் இந்த திருவிழாவில் கவர்ச்சி நடனங்கள் தொடர்கிறது. எனவே ஆன்மிக நிகழ்ச்சியான குலசேகரபட்டினம் தசரா சார்ந்த நிகழ்ச்சிகளில் பக்தி பாடல்கள் இல்லாத பாடல்கள் மற்றும் சினிமா பாடல்களை ஒளிபரப்பி ஆபாச நடனம் ஆடுவதற்கு தடை விதிக்க வேண்டும்.
இதனை மீறும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், ஒலி மற்றும் ஒளி அமைப்பாளர்கள் தசரா குழுக்கள் மற்றும் நடிகர் மற்றும் நடிகர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி மகாதேவன், சத்ய நாராயண பிரசாத் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கவர்ச்சி நடனம் குறித்த புகைப்படங்கள் நீதிபதிகள் முன்பு சமர்ப்பிக்கப்பட்டது. அதனை பார்த்து நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அரசு தரப்பு வக்கீல் திலக குமார் ஆஜராகி, ஏற்கனவே கோர்ட் வழிகாட்டுதலின்படி கோவில் திருவிழாக்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கப்படுகின்றன. சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் வழிகாட்டுதல் குறித்து சுற்றறிக்கையில் ஏற்கனவே போலீஸ் அதிகாரிகளால் பின்பற்றப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார். இது குறித்த ஆவணங்களையும் சமர்ப்பித்தார். அதன் பிறகு நீதிபதிகள், கோவில் திருவிழாவில் ஆபாச நடனங்கள் அனுமதிக்க முடியாது என்று கருத்து தெரிவித்தார். விசாரணையின் முடிவில், தூத்துக்குடி மாவட்ட குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் திருவிழாவில் ஆபாச நடனங்கள் தடை விதிக்கப்படுகிறது. இதனை போலீசார் கண்காணிக்க வேண்டும். மேலும் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.