Categories
மாநில செய்திகள்

தங்கம் விலை கிடுகிடு உயர்வு…. காலையே மக்களுக்கு ஷாக் கொடுத்தது …!!

தங்கம் விலை பவுனுக்கு ரூ 120 உயர்ந்து விற்பனையாவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

கடந்த சில வாரம் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டிய தங்கத்தின் விலை 31 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் இன்று காலை  நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 15 ரூபாயும், சவரனுக்கு 120 ரூபாயும் உயர்ந்து விற்பனையாகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 120 உயர்ந்து ரூ 31,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 22 காரட் 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 15 உயர்ந்து ரூ 3,980-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல வெள்ளி கிராமுக்கு ரூ 30 காசு  உயர்ந்து  ரூபாய் 52.10-க்கு  விற்பனை செய்யப்படுகின்றது. தங்கம் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கவலை  அடைந்துள்ளனர்.

Categories

Tech |