கேரளாவின் வளர்ச்சியை முடக்கும் வகையில் மத்திய புலனாய்வு அமைப்புகள் நடத்தி வரும் விசாரணையில் அமைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தங்க கடத்தல் வழக்கில் விசாரிக்க வேண்டிய அம்சங்களை விட்டு விட்டு விசாரணைக்கு வெளியே அரசுக்கு அவப்பெயர் உருவாக்கும் வகையில் அமலாக்கத்துறை ஈடுபட்டு வருவதாக சாடியுள்ளார். விசாரணை தொடங்கி ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் யார் தங்கம் கடத்தியது ?யார் பெற்றது ? போன்ற விவரங்களை அமலாக்கத்துறை கண்டுபிடிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
கேரள அரசின் வீடு கட்டும் லைஃப் மெஷின் திட்டத்தின் ஆவணங்களைக் கேட்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது, அதிகார வரம்பு மீறல் என்று பினராய் விஜயன் கடிதத்தில் கூறியுள்ளார். லைஃப் மெஷின் திட்ட அதிகாரிகளை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற இரண்டு மாதம் இடைக்கால தடை விதித்ததை கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனிடையே தங்க கடத்தல் வழக்கில் கேரள முதல்வரின் கூடுதல் செயலாளர் ரவீந்திரனிடம் இரண்டாவது நாளாக அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகிறது. கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தது பற்றி அவர் முறையிட்டும் பலன் கிட்டவில்லை. ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலத்தின் அடிப்படையில் ரவீந்திரனிடம் விசாரணை நடத்தப்படுகிறது.