தகராறு செய்த கணவரின் தலையில் மனைவி கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிடார் கிராமத்தில் கிருஷ்ணன்(37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி(27) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக கிருஷ்ணன் தனது மனைவி விஜயலட்சுமி உடன் மேட்டு தும்பூர் பகுதியில் இருக்கும் தனியார் செங்கல் சூலையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கிருஷ்ணனுக்கும், விஜயலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த விஜயலட்சுமி நேற்று முன்தினம் பெரிய கல்லை எடுத்து கிருஷ்ணனின் தலையில் போட்டுள்ளார்.
இதனால் ரத்த வெள்ளத்தில் கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிருஷ்ணனின் உடலை மீட்டு சென்னை கீழ்ப்பக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விஜயலட்சுமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.