ட்விட்டரில் போலி கணக்குகளை நீக்கம் அதிரடியான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசம் வந்த நிலையில் போலியான கணக்குகளை நீக்க அதிரடியான மாற்றங்களை கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி ட்விட்டரின் கணக்குகளை சரிபார்க்கும் செயல்முறை புதுப்பிக்கப்படும் எனவும் எலான் மஸ்க் கூறியுள்ளார். இந்த நிலையில் ட்விட்டரில் தற்போது அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வத் திட்டம் கணக்குகளில் ப்ளூடூத் பயன்படுத்துகின்றார்கள். இந்த ட்விட்டர் கணக்கு அவர்களுடைய அதிகாரபூர்வ twitter கணக்கு தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு ட்விட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீல நிற ப்ளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் twitter ப்ளூ டிக்ற்காக பயனர்கள் 4.49 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டி இருந்தது இதன் மூலமாக பயணங்கள் ட்விட்டரில் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் தாங்கள் பதிவிட்ட பதிவுகளை எடிட் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிப்படுத்தும் ப்ளூ டிக்ற்கு பயனாளர்களிடமிருந்து மாதம் தோறும் 1600 வரை கட்டணம் வசூலிக்க twitter நிர்வாக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகின்றது இந்த அறிவிப்பு வெளியான 90 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தவில்லை என்றால் பயனர்களுக்கு பெயருக்கு அருகில் உள்ள நீல நிற ப்ளூ டிக் குறியீடை பறிக்கும் வகையில் மாற்றம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.