சென்ற 4ம் தேதி நடந்த டெல்லி மாநகராட்சிக்கான தேர்தலில் பதிவாகிய வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 250 வார்டுகளில் பதிவாகிய வாக்குகள் 42 வாக்கு எண்ணும் மையங்களில் நடந்து வருகிறது. இப்பணியை 68 கண்காணிப்பாளர்கள் கவனித்து வருகின்றனர்.
கடந்த 15 வருடங்களாக டெல்லி மாநகராட்சி பா.ஜ.க வசம் இருந்தது. இந்த நிலையில் இன்று நடந்துவரும் வாக்கு எண்ணிக்கையில் காலை 10 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி 129 வார்டுகளில் முன்னிலையில் இருக்கிறது. அதேபோல் பா.ஜ.க 106 வார்டுகளிலும், காங்கிரஸ் 10 வார்டுகளிலும் முன்னிலை வகிக்கிறது.