Categories
தேசிய செய்திகள்

“டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் விஐபி கலாச்சாரம்”…. மத்திய அரசின் நடவடிக்கைக்கு மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு…!!!!!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மருத்துவ பராமரிப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து எளிதாக ஒரு மருத்துவ அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும் என புதிதாக நிலையான வழிகாட்டுதல் நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அதனை ஏற்று டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் எம் ஸ்ரீனிவாஸ் மக்களவை செயலகத்தின் இணை செயலாளர் வையம் காந்த் பாலுக்கு கடிதம் எழுதி இருக்கின்றார். இந்த நிலையில் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, 24 மணி நேரமும் எய்ம்ஸ் கட்டுப்பாட்டு அறையில் மருத்துவமனை நிர்வாகத்துறையை சேர்ந்த மருத்துவர்கள் அதிகாரிகளாக இருப்பார்கள் அவர்கள் சிகிச்சைக்கு வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து எளிதாக்க நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

மேலும் புதிய வழிகாட்டுதல்கள் நடைமுறைகளின் படி வெளி நோயாளிகள் பிரிவு உள்நோயாளிகள் பிரிவு மற்றும் அவசர ஆலோசனை சிகிச்சைக்கு வரும் மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையின் தற்போதைய எம்பிக்களுக்கு தேவையான ஏற்பாடுகளை ஒருங்கிணைக்க நியமிக்கப்பட்டு இருக்கின்றார்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த சூழலில் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். அகில இந்திய மருத்துவ சட்ட அமைப்பினர் பேசும்போது ஒரு பக்கம் நாட்டில் விஐபி கலாச்சாரம் இல்லை என பிரதமர் மோடி கூறுகின்றார். மற்றொரு பக்கம் எய்ம்ஸ் இயக்குனர் பி பி ஐ கலாச்சாரத்திற்கு வழி வகுத்து கடிதம் எழுதி இருக்கின்றார் நாங்கள் எப்போதும் மருத்துவமனைகளில் விஐபி கலாச்சாரத்திற்கு எதிராக இருக்கின்றோம். இந்த நாட்டில் ஒவ்வொரு நோயாளியும் நல்ல சிகிச்சைக்கு தகுதியானவர் ஆனால் அதில் ஒரு எம்பி மற்றும் சாமானிய நகரும் அடங்குவர் என தெரிவித்துள்ளார்.

மேலும் மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் பேசும்போது விஐபி கலாச்சாரத்தை வன்மையாக கண்டிக்கின்றோம். எந்த நோயாளியும் மற்றொருவரின் சலுகைகளை விலையாகக் கொண்டு துன்பப்படக்கூடாது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் எம்பிகளுக்கான புதிதாக வகுக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டுதல் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என நேற்று இயக்குனர் கடிதம் எழுதியிருந்த நிலையில் அதனை தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வெளியீட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, எய்ம்ஸ் மருத்துவமனையில் கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் ஏழைகள் உட்பட அனைத்து தரப்பு மக்களுக்காகவும் அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து எளிதாக மருத்துவமனை நிர்வாகத்துறையை சேர்ந்த மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள் என கூறியுள்ளது.

Categories

Tech |