Categories
தேசிய செய்திகள்

டெல்லியை உலுக்கும் கொரோனா: முழு ஊரடங்கு அமல்…? – முதல்வர் முக்கிய ஆலோசனை…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் நேற்று ஒரே நாளில் 17,282 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதில் 104 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் டெல்லியை கொரோனா உலுக்கி வருவதால் இன்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆளுநர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஊரடங்கு உள்ளிட்ட முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |