டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு அதிகரிப்பதை தடுப்பதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை மீறி பட்டாசு வெடித்தால் ரூபாய் 200 அபராதமும், ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இதையும் மீறி பலர் பட்டாசுகளை வைத்து தீபாவளி கொண்டாடியதனால் தீபாவளி நாளில் உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லி மாறி உள்ளது.
இந்த சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியின் காற்றின் தர குறியீடு 355 என்ற அளவில் பதிவாகி இருக்கிறது. அதாவது டெல்லி முழுவதும் காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற நிலையை எட்டி இருக்கிறது. இதனை அடுத்து டெல்லி பல்கலைக்கழக பகுதியில் 355 மதுரா சாலை பகுதியில் 340 நொய்டாவில் 392 என்ற நிலையில் காற்றின் தர குறியீடு பதிவாகி இருக்கிறது. இதனை அடுத்து காற்று மாசுபாடு அதிகரிப்பதை தடுப்பதற்காக அரசு தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது.