Categories
தேசிய செய்திகள்

டெல்லியிலும் நர்சரி முதல் 8ம் வகுப்பு வரை ஆல்பாஸ்… 12ம் வகுப்புகளுக்கு ஆன்லைன் கிளாஸ்: அரவிந்த் கெஜ்ரிவால்

பல்வேறு மாநிலங்களின் பள்ளிக்கல்வித்துறை எடுத்த நடவடிக்கைகளுக்கு பிறகு தற்போது, டெல்லியிலும் மாணவர்கள் தேர்வு எழுதாமல் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நடத்திய காணொலி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய கல்வித்துறை அமைச்சர் மின் மனிஷ் சிசோடியா, ” கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கல்வி உரிமையின் கீழ் நர்சரி முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு எழுதாமல் அடுத்த வகுப்புகளுக்கு உயர்த்தப்படுவாராகள் என தெரிவித்தார். மேலும், படிப்பு சம்பந்தமாக ஒரு செயல்பாடு அல்லது திட்டம் (one activity/project) சார்ந்த வேலை அனைத்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு எம்.எம்.எஸ் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தெரிவிக்கப்படும் என கூறியுள்ளார்.

அந்த வேலைகளை மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே முடிந்து காண்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதேபோல 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது என தெரிவித்தார். தடுப்பு காவல் நடவடிக்கைகளின் கீழ் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன” எனக் கூறினார். இதையடுத்து பேசிய டெல்லி முதல்வர், ” லாக்டவுன் காலத்தில் டெல்லியில் குடியேறிய தொழிலாளர்களின் நடமாட்டத்தைத் தடுக்க டெல்லியின் எல்லைகளில் கடுமையான ரோந்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.

Categories

Tech |