Categories
தேசிய செய்திகள்

டெல்லியின் அடுத்த தலைமைச் செயலாளர்…. யார் தெரியுமா…?

டெல்லியின் தலைமைச் செயலாராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி நரேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் தலைமைச் செயலாளர் பணி  புரிந்த விஜய் தேவ் விருப்ப ஓய்வு பெற்றதை தொடர்ந்து, டெல்லியின் புதிய தலைமைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி நரேஷ் குமார் நியமிக்கப்பட்டிருப்பதாக  மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நியமனம் வருகின்ற 21 ஆம் தேதி அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நரேஷ் குமார், அருணாச்சல பிரதேசத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றி வந்த நிலையில் அவரை டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும் விருப்ப ஓய்வு பெற்ற விஜய் தேவ், மாநில தேர்தல் ஆணையராக வருகின்ற 21 ஆம் தேதி பதவியேற்க இருக்கிறார்.
இதற்கு முன்பு நரேஷ் குமார் டெல்லி மாநகராட்சி சேர்மனாகவும், டெல்லி போக்குவரத்துத்துறை இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்தாகும்.

Categories

Tech |