Categories
சேலம் மாவட்ட செய்திகள்

50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு… 50 % அனுமதிக்க வேண்டும்…. டெண்ட் டீலர்ஸ் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!

சேலம் மாவட்டத்தில் திருமண விழாக்களில் 50 % பேர் பங்கு கொள்ள அனுமதிக்க வேண்டுமென டெண்ட் டீலர்ஸ் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவி வருவதால் தொற்றை தடுக்கும் முறையில் மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களான திருமண விழாக்களில் அதிகமானோர் பங்கு பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு டென்ட் டீலர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்ஸ் நல சங்கத்தினர் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் கூறியுள்ளதாவது, திருமணம் உள்ளிட்ட விழாக்களில் பந்தல், மேடை அமைத்தல், சமையல் கலைஞர்கள் மற்றும் வாடகை பாத்திரக்கடை வைத்திருப்பவர்கள் என தமிழகம் முழுவதும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளார்கள். மேலும் ஊரடங்கால் எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு சிரமப்படுகிறோம். இதனால் எங்கள் நலன் கருதி திருமண மண்டபங்களில்  50% பேர் பங்கு கொள்ள அனுமதிக்க வேண்டுமென போராட்டம் நடத்தியுள்ளனர்.

Categories

Tech |