வட கிழக்கு டெல்லியின் பஜன்புரா பகுதியில் இருசக்கர வாகனத்தை தேசியக் கொடியைப் பயன்படுத்தி சுத்தம் செய்ததாக 52 வயது நபர் ஒருவரை 1971 தேசிய மரியாதையை அவமதிப்பது தடுப்புச் சட்டம் பிரிவு 2 இன் கீழ் வழக்குப்பதிவு செய்து டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். அத்துடன் அவரது இருசக்கர வாகனம் மற்றும் கொடியை பறிமுதல் செய்தனர். சம்பந்தப்பட்ட நபர் டெல்லியின் வடக்கு கோண்டா பகுதியில் வசித்து வருபவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருசக்கர வாகனத்தை தேசியக் கொடியால் சுத்தம் செய்ததை அப்பகுதியிலுள்ள ஒருவர் மாடியிலிருந்து வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவேற்றி இருக்கிறார். அந்த விடியோ இப்போது வைரலாகி வருகிறது. அதில், அந்நபர் தன் வெள்ளைநிற இருசக்கர வாகனத்தை தேசியக்கொடியை மடித்து சுத்தம்செய்து தூசி தூவினார். அதன்பின் அவர் வீட்டிற்கு சென்றதாக வீடியோவில் இருந்தது.