டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க்கிற்கு விற்பது குறித்து ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் பங்குதாரர்களிடம் வாக்கெடுப்பு நடத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் தொகைக்கு தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு விற்பனை செய்வது குறித்து ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் பங்குதாரர்களிடம் வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதனை அடுத்து ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் குறித்த தரவுகளை கொடுக்க மறுத்த நிலையில் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் எச்சரித்துள்ளார். ஆனால் எலான் மஸ்க்கிடம் தொடர்ந்து தகவல்களை பகிர்ந்து கொள்வதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.