காளான் – 200 கிராம்
பெரிய வெங்காயம் – ஒரு எண்ணம் (நடுத்தர அளவு)
கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
இஞ்சி – முக்கால் சுண்டுவிரல் அளவு
வெள்ளைப் பூண்டு – 2 பற்கள் (பெரியது)
மிளகாய் பொடி – 1 ஸ்பூன்
கரம் மசாலா பொடி – 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி – ½ ஸ்பூன்
மசாலா பொடி – 1 ஸ்பூன்
மிளகு பொடி – ¾ ஸ்பூன்
சீரகப் பொடி – ½ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
சமையல் எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் காளானை சுத்தம் செய்து, நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பின் இஞ்சி மற்றும் பூண்டினை விழுதாக்கியும், கறிவேப்பிலையை உருவியும் கொள்ளவும்.
பின் பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நீளவாக்கில் நறுக்கிய காளான், நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, கடலை மாவு, அரிசி மாவு, காஷ்மீரி மிளகாய் பொடி ஆகியவற்றைச் சேர்க்கவும்.
பின்னர் அதனுடன் கரம் மசாலா பொடி, மசாலா பொடி, மஞ்சள் பொடி, மிளகு பொடி, சீரகப் பொடி, உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து மெதுவாக ஒரு சேர பிசையவும். ஆகவே தண்ணீர் ஏதும் சேர்க்க தேவையில்லை.
வாணலியை அடுப்பில் வைத்து பொரித்தெடுக்கத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவினை எடுத்து சிறிது சிறிதாகக் கிள்ளிப் போடவும். பின் சிவக்க வெந்ததும் எடுத்து விடவும். இப்போது சுவையான காளான் பக்கோடா தயார்.