Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

டீ குடித்த கல்லூரி மாணவர்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கல்லூரி மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மகாராஜபுரம் பகுதியில் ஜஸ்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயின் என்ற மகன் மகன் இருந்துள்ளார். இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயின் ஆசாரிபள்ளம் பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்று இரவு நேரத்தில் டீ குடித்துள்ளார். அப்போது ஜெயின் திடீரென மயங்கி விழுந்துவிட்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயின் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |