Categories
தேசிய செய்திகள்

டீ குடித்து அடுத்த நிமிடமே மயங்கிய 5 பேர்…. உயிருக்கே உலை வைத்த மூலிகை….. நடந்தது என்ன….? பகீர் சம்பவம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் சிவானந்தம். இவருடைய வீட்டில் வழக்கம் போல மனைவி மூலிகை டீ போட்டுள்ளார். அப்போது வீட்டில் இருந்த சிவானந்தம் அவருடைய 6 வயது மகன், ஐந்து வயது மகன் உள்ளிட்டர் டீயை குடித்துள்ளனர். அது மட்டும் இன்றி வீட்டிற்கு வந்த அவருடைய மாமா பக்கத்து வீட்டைச் சேர்ந்த சோப்ரான் என்பவரும் மூலிகை டீயை குடித்துள்ளார்கள். பின்னர் சிறிது நேரத்தில் இந்த ஐந்து பேருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஐந்து பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். இதனையடுத்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சிவானந்தத்தின் மனைவி டீ தயாரித்த மூலிகை செடி விஷத்தன்மை கொண்டதாக இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் விஷம் கலந்து டீ கொடுக்கப்பட்டுள்ளதா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |