Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

டீ குடிக்க சென்ற முதியவர்…. கல்லால் தாக்கிய வாலிபர்…. சிகிச்சை பலனின்றி ஒருவர் பலி….!!

முதியவரை கல்லால் தாக்கி கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ஆவாரங்காடு பகுதியில் வேலப்பன் என்ற முதியவர் தனியாக வசித்து வந்துள்ளார். விசைத்தறி தொழிலாளியான இவர் அப்பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை அருகே டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அப்பகுதி வழியாக நடந்து வந்த வாலிபர் ஒருவர் திடீரென கீழே கிடந்த கல்லை எடுத்து வேலப்பனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த பழனிச்சாமி என்ற முதியவர் வாலிபரை தடுக்க முயன்றுள்ளார். ஆனாலும் அந்த வாலிபர் ஆத்திரத்தில் இரண்டு பேரையும் கல்லால் தாக்கி இதில் வேலப்பன் மற்றும் பழனிச்சாமி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் வருவதை பார்த்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனைதொடர்ந்து காயமடைந்த வேலப்பன் மற்றும் பழனிசாமியை மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைகாக 2 பேரையும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வேலப்பன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தற்போது பழனிசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து பள்ளிபாளையம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து நடத்திய விசாரணையில் முதியவரை தாக்கிய வாலிபர் திருச்செங்கோடு கவுண்டம்பாளையத்தில் சேர்ந்த கோகுல் நந்தா என்பது தெரியவந்துள்ளது. என்ஜினீயரான இவருக்கு கடந்த சில மாதங்கள் முன்பு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர் பெங்களூருவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து நேற்று திடீரென வீட்டில் இருந்த நந்தா பள்ளிபாளையம் நடந்து சென்றதும், எதிரே வந்த வேலப்பனை கல்லால் தாக்கியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |