இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே நவீன மயமாகிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கைகளிலும் செல்போன் இருக்கிறது. செல்போன் பார்ப்பதினால் குழந்தைகளுடைய கல்வி பாதிக்கப்படுகிறது. ஆனால் ஒருசில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்கிறார்கள். அதுமட்டுமின்றி ஆன்லைன் மூலமாக பாடம் நடத்தப்படுவதனால் ல் குழந்தைகளின் கவனம் கல்வி மேல் இருந்து சிதறுவதை உணர்ந்த மகாராஷ்டிராவின் ஒரு கிராமத்தினர் புதிய முறையை கையாளுகின்றனர்.
மாலை 7 மணி முதல் 8.30 மணி வரை செல்போன். டிவி அனைத்தையும் அணைத்துவிட்டு புத்தகங்களை வைத்து மாணவர்களை படிக்க சொல்கின்றனர். இதனால் குழந்தைகளின் கல்வித் திறனும் அதிகரித்திருப்பதாக அந்த கிராமத்தினர் நம்புகின்றனர்.