டிபன் பாக்ஸில் வெடிகுண்டுகள் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்முவில் உள்ள கனாசக் என்ற இடத்தில் பாகிஸ்தான் நாட்டிற்கு சொந்தமான ஆளில்லா குட்டி விமானம் வானத்தில் பறந்துள்ளது. இதைப் பார்த்த பாதுகாப்பு படையினர் உடனே அந்த குட்டி விமானங்களை சுட்டு வீழ்த்தினர். இதனையடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில் இரவு 11 மணி அளவில் மீண்டும் ஆளில்லா குட்டி விமானம் வானத்தில் பறந்துள்ளது.
அந்த விமானத்தையும் சுட்டு வீழ்த்தினர். அந்த ஆளில்லா குட்டி விமானத்தில் குழந்தைகள் பயன்படுத்தும் டிபன் பாக்ஸ்கள் இருந்தது. அந்த டிபன் பாக்ஸில் காந்த வெடிபொருட்கள் இருந்தது. அந்த வெடி பொருட்களில் வெவ்வேறு நேரங்கள் குறிக்கப்பட்டு வெடிக்குமாறு வடிவமைத்து வைத்திருந்தனர். அதை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர். மேலும் இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.