Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 2ஆம் வாரம் வரை மக்களே ஜாக்கிரதை….! அமைச்சர் எச்சரிக்கை…!!

தமிழகத்தில் தற்போது மழை காலம் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு தொற்று நோய்களும் உருவாக வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் மெட்ராஸ் ஐ என்று அழைக்கப்படும் கண் வலி தற்போது குழந்தைகள் மற்றும் சிறார்கள் அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக நெல்லையில் சராசரியாக மருத்துவமனை ஒன்றுக்கு நூறு முதல் 120 பேர் வரை மெட்ராஸ் ஐ பாதிப்பால் சிகிச்சைக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது மெட்ராஸ் ஐ தீவிரமாக பரவி வருவதால், மக்கள் கவனமுடன் இருக்கும்படி அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். மேலும், இந்த பாதிப்பு டிசம்பர் முதல் வாரம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது. டிசம்பர், 2ஆம் வாரத்திற்கு பிறகு இது முற்றிலும் நீங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை மெட்ராஸ் ஐ-ஆல் பாதிக்கப்பட்டால், மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வதே நல்லது என்று அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |