Categories
மாநில செய்திகள்

டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது…. குண்டர் சட்டம் பாய்ந்தது….!!!!

டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக கோவை மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.

மதுரையை சேர்ந்த ரவுடி பேபி என்ற பெயரில் டிக்டாக்கில் பிரபலமானவர் சுப்புலட்சுமி என்ற சூர்யா (35 ). இவரும் அவரது நண்பருமான மதுரை சுப்பிரமணியபுரத்தில்  உள்ள சிக்கந்தர்ஷா என்ற சிக்கா (45) இருவரும் சேர்ந்து யூடியூப் சேனலில் வரும் ஒரு பெண்ணின் நிகழ்ச்சி தொடர்பாக அந்தப் பெண்ணை தகாத முறையில் விமர்சித்துள்ளனர். அந்த பெண் கோவையில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண் ஆவார்.

இச்சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணும் அவரது கணவரும் சேர்ந்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் புகார் ஒன்றை அளித்தனர். அதன்படி சுப்புலட்சுமி மற்றும் சிக்கந்தர்ஷா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, கடந்த மாதம் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய சிக்கந்தர்ஷா மீது போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இதேபோல் ரவுடி பேபி சூர்யாவும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் கோவை மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். இதனையடுத்து கலெக்டர் பிறப்பித்த உத்தரவின் பேரில் ரவுடி பேபி சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

 

Categories

Tech |