ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்வது தொடர்பாக ஐஆர்சிடிசி நிறுவனமானது விதிமுறை குறித்து விளக்கப்பட்டுள்ளது.
ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும் போது நெட்வொர்க் அல்லது தொழில்நுட்ப கோளாறுகளினால் டிக்கெட் புக்கிங் ஆகாமல் பணம் மட்டும் வங்கிக் கணக்கிலிருந்து கழிக்கப்படும். இந்நிலையில் இதுகுறித்து ஐஆர்சிடிசி விதிமுறை கூறியுள்ளதாவது, டிக்கெட் கட்டணத்துக்கான முழு தொகையையும்அவர்களின் வங்கிக்கணக்கில் ரீஃபண்ட் செய்யப்படுவதால், கவலைப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ரயில் டிக்கெட் புக்கிங் செய்த பின், அது கன்ஃபார்ம் ஆகிவிட்டால் அதற்கான கேன்சல் ரீஃபண்ட் வெவ்வேறு அளவில் வழங்கப்பட உள்ளது. அதன்படி, கேன்சல் செய்யும் நேரம் மற்றும் பெட்டியின் வகையை பொறுத்து ரீஃபண்ட் தொகையானது மாறுபடுகிறது. இதையடுத்து வண்டி கிளம்புவதற்கு முன் 48 மணி நேரத்துக்குள் டிக்கெட்டை கேன்சல் செய்தால், அதற்கான கேன்சல் தொகையானது, கீழ்க்கண்டவாறு கிடைக்கப் பெறுகிறது.
ஏசி பர்ஸ்ட் / எக்ஸிகியூட்டிவ் கிளாஸ் = ரூ.240 மற்றும் ஜிஎஸ்டி
ஃபர்ஸ்ட் கிளாஸ் / ஏசி 2 டைடர் = ரூ.200 மற்றும் ஜிஎஸ்டி
ஏசி சேர் கார் / ஏசு 3 டையர் / ஏசி 3 எகானமி = ரூ.180 மற்றும் ஜிஎஸ்டி
ஸ்லீப்பர் கிளாஸ் = ரூ.120
செகேண்ட் கிளாஸ் = ரூ.60
மேலும் ஒருவேளை ரயில் புறப்படுவதற்கு முன் 24 மணி நேரம் முதல் 12 மணி நேர இடைவெளியில் டிக்கட்டை கேன்சல் செய்தால் டிக்கெட் கட்டணமானது 25 சதவீதத்துடன், ஜிஎஸ்டி சேர்த்து பிடித்தம் செய்யப்படுகிறது.
இதனை தொடர்ந்து ரயில் புறப்படுவதற்கு முன் 12 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரையில் டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டால் 50 சதவீத டிக்கெட் கட்டணமும், அதோடு ஜிஎஸ்டியும் சேர்த்து வசூலிக்கப்படும். மேலும் பிடித்தம் செய்யப்பட்ட தொகை போக எஞ்சிய பணமானது அக்கவுண்டில் வந்து சேரும். இவ்வாறு அதில் விளக்கப்பட்டுள்ளது.