Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி பதிவேற்றதில் புதிய நடைமுறை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவோர் அரசு பணிகளில் நியமிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அரசு பணிகளிலுள்ள பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 உள்ளிட்ட தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் இந்த வருடத்துக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது அனைத்து சான்றிதழ்களையும் பிடிஎப் (pdf) வடிவில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று புதிய நடைமுறையை TNPSC அறிவித்துள்ளது. சான்றிதழ் பதிவேற்றத்தில் தவறு நேர்ந்தால் OTR கணக்கு மூலம் திருத்திக்கொள்ள அவகாசம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்யும் சான்றுகளின் அடிப்படையிலேயே தேர்வுக்கு பிந்தைய சான்றிதழ் சரிபார்க்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |