தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் ஒவ்வொரு தேர்வுக்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. அவ்வகையில் கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர் மற்றும் தொழில், வர்த்தகத்துறை மற்றும் பண்டகக்காப்பாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 3 தேர்வு நடத்தப்பட உள்ளது. நடப்பு ஆண்டு 15 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அக்டோபர் 14ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக பலரும் விண்ணப்பித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு வருகின்ற 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 38 மையங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்னிடையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 3 தேர்வு மையங்கள் எண்ணிக்கை சில நிர்வாக காரணங்களால் குறைக்கப்பட்டுள்ளதாக புதிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வு சென்னை, மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 15 மாவட்ட தேர்வு மையங்களில் மட்டுமே அறிவிக்கப்பட நாளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.