தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு பிப்ரவரி 23 (நேற்று) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படும் எனவும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணை நேற்று வெளியிடப்பட்டது. மே 21-ஆம் தேதி நடைபெற உள்ள குரூப்-2, குரூப் 2A தேர்வுகளுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வுகள் பிப்ரவரி 23 முதல் மார்ச் 23-ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். போட்டித் தேர்வுக்கான முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே குரூப்-2, 2ஏ தேர்வாளர்கள் மே 21-ஆம் தேதி சனிக்கிழமை என்பதால் அன்று வேலைக்கு செல்பவர்களுக்கு தேர்வு எழுதுவதில் பல சிக்கல்கள் உள்ளது. எனவே மே 22-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தேர்வை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.