Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஞாயிற்றுக்கிழமை இல்லை…. இனி சனிக்கிழமை தோறும் மெகா தடுப்பூசி முகாம்…. அதிரடி மாற்றம்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மெகா தடுப்பூசி முகாம்களை வாரம்தோறும் அரசு நடத்தி வருகிறது. தடுப்பூசி போடுவதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை 11 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு ஒரு கோடிப் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தடுப்பூசி முகாம்களிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் இனி சனிக்கிழமை தோறும் தடுப்பூசி முகாம் நடைபெறும். மருத்துவ பணியாளர்கள் நலன் கருதி ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்த முகாம் சனிக்கிழமை மாற்றப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |