முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெய்பீம் படத்தை பாராட்டி டுவிட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம். டி.ஜே.ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், லிஜோமொல் ஜோஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நாளை (நவம்பர் 2) இந்த படம் நேரடியாக அமேசான் பிரைமில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் ஜெய்பீம் படத்தை பார்த்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘பார்வையாளர்களின் மனதில் தாக்கத்தையும் அதன் விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவது தான் சிறந்ததொரு கலைப்படைப்பு.
வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உணர்வுப்பூர்வமான பாராட்டு, ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறது. ஜெய்பீம் படக்குழுவினர் அனைவரின் சார்பாகவும் நமது தமிழக முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்… 🙏🏼 https://t.co/48vBWpdjGm
— Suriya Sivakumar (@Suriya_offl) November 1, 2021
நேற்று நண்பர் சூர்யா வழக்கறிஞர் சந்துருவாக வாழ்ந்துள்ள ஜெய்பீம் படத்தை பார்த்தேன். அத்திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம்’ என பதிவிட்டுள்ளார். மேலும் இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உணர்வுபூர்வமான பாராட்டு, ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறது. ஜெய்பீம் படக்குழுவினர் அனைவரின் சார்பாகவும் நமது தமிழக முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்’ என தெரிவித்துள்ளார்.