ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததற்காக 24 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கோர விட்டால், நஷ்ட ஈடாக 5 கோடி ரூபாய் வழங்க வேண்டுமென கேட்டு வன்னியர் சங்கம் சார்பில் நடிகர் சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அண்மையில் அமேசான் இணைய தளத்தில் வெளிவந்த ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர்கள் மற்றும் வன்னியர் சங்கம் குறித்து தவறான காட்சிகள் மற்றும் பொருள்படும்படியான கதாபாத்திரம் உள்ளதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி சார்பாக அவரின் வழக்கறிஞர் பாலு படத்தின் தயாரிப்பாளர்கள், நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, இயக்குனர் ஞானவேல், படத் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட், அமேசான் நிறுவனம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அந்த நோட்டீஸில் ஊடகங்கள் வாயிலாக 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.