நடிகர் சூர்யா நடிப்பில் கூட்டத்தில் ஒருவன் திரைப்பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வெளியாகிய படம் “ஜெய்பீம்” ஆகும். இந்த திரைப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதாவது இருளர் பழங்குடியின மக்களின் வாழ்க்கை மற்றும் உரிமைகள் குறித்து பேசும் இப்படத்தில் நடிகர் சூர்யா, பழங்குடிஇன மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்து இருந்தார். கடந்த வருடம் நவம்பர் மாதம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகிய இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இத்திரைபடத்தின் வெற்றியால் பல்வேறு விருதுகளும் கிடைத்தது. இந்த நிலையில் 12-வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் விருதுகள் பட்டியல் வெளியாகிய சூழ்நிலையில், ஜெய்பீம் படத்திற்கு 2 விருதுகள் கிடைத்துள்ளது. அத்துடன் சிறந்த படமாக “ஜெய்பீம்” தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இத்திரைப்படத்தில் ராஜகண்ணு கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டன் சிறந்த துணை நடிகராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இத்தகவலை திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது.