Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெயிலர் படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை….. “கிசுகிசுக்கள் செய்த வேலை”…. என்ன நடந்தது தெரியுமா…?

ஜெயிலர் திரைப்படத்தில் பிரபல நடிகை நடிக்க மறுத்தற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். இவர்  நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள்.

இத்திரைப்படத்தில் முதலில் நடிக்க நடிகை பிரியங்கா மோகனிடம் படக்குழு அணுகியுள்ளது. ஆனால் இத்திரைப்படத்தில் நடிக்க பிரியங்கா மறுத்து விட்டார். முன்னதாக முதல் திரைப்படமான டாக்டர் படத்தில் நடித்த பொழுது அவரைப் பற்றியும் பட இயக்குனர் நெல்சன் பற்றியும் பரவலாக கிசுகிசுக்கள் பரவியது. இதனால் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்தால் மேலும் கிசு கிசுக்கள் அதிகமாகிவிடும் என எண்ணி பிரியங்கா படத்தில் நடிக்கும் வாய்ப்பைமறுத்துவிட்டார். தற்பொழுது அந்த கேரக்டரில் தமன்னா நடிக்க இருப்பதாக சொல்லப்படுகின்றது.

Categories

Tech |