தமிழகத்தில் நேற்று சட்டப்பேரவையில் பல்வேறு பரபரப்பு சம்பவங்கள் நிகழ்ந்தது.எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு எம் எல் ஏக்கள் ஓபிஎஸ்ஐ எதிர்க்கட்சித்துறை தலைவராக வைக்க கூடாது அதற்கு பதிலாக ஆர்பி உதயகுமார் தான் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருக்க வேண்டும் என சட்டப்பேரவையில் முழக்கமிட்டனர். இதனால் சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.அதன் பிறகு சபாநாயகர் உத்தரவிட்ட நிலையில் இபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் ஜெயலலிதா நினைவிடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஆர்பி உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அங்கீகரிக்க வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் திடீர் திருப்பமாக ஜெயலலிதா நினைவிடத்தில் போராட்டம் நடைபெற உள்ளது.