Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்தார்…. அப்பல்லோ மருத்துவர் பரபரப்பு வாக்குமூலம்…..!!!!!

மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்ததாக அப்போலா மருத்துவர் பாபு மனோகர் ஆறுமுகசாமி ஆணையத்திடம் தெரிவித்துள்ளார். மேலும் 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா பதவியேற்கும் நாளுக்கு முன்பாகவே அவருக்கு மயக்கம், தலைசுற்றல் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் இன்று (மார்ச் 7) மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளது.

நாளொன்றுக்கு 16 மணி நேரம் வேலை இருப்பதாக ஜெயலலிதா கூறினார் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்நிலையில் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, ஜெயலலிதா உடல்நிலை, வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவர்கள் சாட்சியம் அளித்தனர்.

மருத்துவர்கள் வாக்குமூலத்தின்படி ஜெயலலிதாவுக்கு உடல் உபாதைகள் இருந்தது தெரியவந்தது. ஜெயலலிதாவுக்கு இருந்த உடல்நல பிரச்சினைகள் குறித்து மருத்துவர்கள் கூறினார்கள். ஜெயலலிதா மரணம் குறித்து 2 விதமான போக்கில் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |