நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் ஜூலை 27-ஆம் தேதி வரை புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்க படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி 50% இருக்கைகளுடன் காலை 10 மணி முதல் இரவு 11 மணிவரை உணவகங்கள் மற்றும் பார்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள் அனைத்தும் வழக்கம் போல செயல்பட அனுமதி. ஏற்கனவே இருக்கும் தளர்வுகள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.