Categories
தேசிய செய்திகள்

ஜூலை 22 முதல் போராட்டம்…. விவசாயிகள் அறிவிப்பு…..!!!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்திய போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு காரணங்களால் இதுவரை 470 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஜூலை 22 முதல் நாடாளுமன்றம் முன் போராட்டம் நடைபெறும் என பாரதிய கிசான் சங்கம் தலைவர் ராகேஷ் திகாயத் அறிவித்துள்ளார். விவசாயிகளுடன் பேச்சு நடத்த ஒன்றிய அரசு தயாராக இல்லை. இதனால் ஜூலை 22 முதல் அனைத்து விவசாய சங்கங்களின் ஆதரவுடன் போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |