Categories
தேசிய செய்திகள்

ஜூலை-15 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. மேற்கு வங்க அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ஊரடங்கினால் தொற்று எண்ணிக்கை ஓரளவிற்கு குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கு தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் மேற்கு வங்கத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 15 வரை ஊரடங்கு நீட்டித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். அதன்படி,சலூன்கள், அழகு நிலையங்கள் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதி. உடற்பயிற்சி கூடங்கள் 50% பேருடன் இயங்க அனுமதி. தனியார், கார்ப்பரேட் அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |