நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது வரும் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதற்கான நடைமுறையை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த விரிவான செயல் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி ஜூலை 1ம்தேதி முதல் இந்தியா முழுவதும் தடை செய்யப்படுவதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் அறிவித்திருந்தது.
மேலும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய குறைவான பயன்பாடு கொண்ட அதிக குப்பைகளை ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை, பயன்பாடு ஆகிய அனைத்தும் இந்தியா முழுவதும் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் தடை செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் செய்யப்படும் தொழிற்சாலைகளுக்கு மூலப் பொருட்களை வழங்க வேண்டும் என்று தேசிய மாநில மற்றும் உள்ளூர் மட்டங்களில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை விற்க மாட்டோம் என்ற நிபந்தனையுடன் புதிய வணிக உரிமைகளை வழங்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதை கண்டறிந்தால் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தடை விதிக்கப்படும் பொருட்கள்:-
* பிளாஸ்டிக்கால் ஆன காது குடையும் குச்சி
* பலூனில் கட்டப்படும் பிளாஸ்டிக் குச்சி
* பிளாஸ்டிக் குச்சி
* பிளாஸ்டிக் கொடி
* மிட்டாயில் இருக்கும் பிளாஸ்டிக் குச்சி
* ஐஸ்கிரீம் குச்சி
* அலங்கார வேலைகளுக்கான தெர்மகோல்
* சாப்பிட பயன்படுத்தும் பிளாஸ்டிக் முள்கரண்டி, தேக்கரண்டி, கத்தி
* சுவீட் பாக்ஸ், அழைப்பிதழ், சிகரெட் பாக்கெட் ஆகியவற்றை சுற்றி கட்டப்படும் பிளாஸ்டிக் சுருள்கள்
* பிளாஸ்டிக் அல்லது பி.வி.சி. பேனர்கள்