Categories
தேசிய செய்திகள்

ஜூன் 3 ம் தேதி முதல் 5 ம் தேதி வரை…. முதன்முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி…. எங்கு தெரியுமா….?

சென்னையில்  ஜூன் 3 ம் தேதி முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெற இருக்கின்றது.

சென்னை கலைவாணர் அரங்கில் வருகிற ஜூன் 3 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை இந்த மலர் கண்காட்சி நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறும் மலர்க்கண்காட்சி முதல்வர்  மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார். முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில் தமிழ்நாடு அரசு புதிய முயற்சியாக மலர் கண்காட்சி நடத்தி வைக்கின்றது.

இந்நிலையில் கருணாநிதி உருவ வடிவில் மலர் அலங்காரம் மற்றும் அதிமுக அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் விதமாக இந்த மலர் காட்சி வடிவமைக்கப்படுகின்றது. மேலும் இந்த கண்காட்சியை ஜூன் மூன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிட தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

Categories

Tech |