நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தி வருகின்றது. மேலும் ஒரு சில மாநிலங்களில் கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தி வருவதால் நோய்த்தொற்று குறைந்து வருவதாக அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் கர்நாடகாவில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு ஜூன் 7ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில் மேலும் ஒரு வாரம் நீடிக்க அமைச்சர் எடியூரப்பா தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதை தொடாந்து ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.