மேட்டூர் அணையின் பாசனத்தின் மூலமாக சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. வருடந்தோறும் ஜூன்-12 ஆம் தேதி முதல் ஜனவரி-28 ஆம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.
இந்நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பு குறித்து நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.33 அடியாக உள்ள நிலையில் இன்று அணை திறப்பு குறித்த அறிவிப்பை முதல்-அமைச்சர் ஸ்டாலின் வெளியிடுகிறார்.