Categories
மாநில செய்திகள்

“ஜாதியின் பெயரிலான அடக்கு முறையை ஏற்க முடியாது” காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம்…. அன்புமணி ராமதாஸ் பளீர்….!!!!

சென்னையில் ஊ.ப சௌந்தரபாண்டியன் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அவர் விழாவில் பேசியதாவது, ஜாதியால் அனைத்து மக்களுமே ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்படுகிறார்கள். அனைத்து ஜாதியும் முன்னேற வேண்டும் என்பதுதான் நோக்கம். ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு தனி அடையாளம் இருப்பினும், ஜாதியால் நடக்கும் அடக்குமுறைகளை ஏற்க முடியாது. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு அடையாளம் உண்டு. அனைத்து சமுதாயத்தினரும் முன்னேற வேண்டும். மருத்துவர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கங்களை இணைக்கும் விதமாக சமூக நீதிப் போராட்டம் நடைபெற்றது.

அப்போது 21 உயிர்களை இழந்தோம். இருப்பினும் அதன் பலனாய் 108 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. தற்போதுள்ள கட்சிகள் நாங்கள் காமராசர் ஆட்சியை கொண்டு வருவோம் என்று கூறலாம். ஆனால் காமராஜரை போன்று யாராலும் ஆட்சி செய்ய முடியாது. காமராஜர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் தலைவர் கிடையாது. அவர் இந்தியாவுக்கே தலைவர். காமராஜர் கல்விக்கு வித்திட்டவர். தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம் என்று கூறினார். மேலும் நிகழ்ச்சியின் முடிவில் ஊ.ப சௌந்தரபாண்டியன் அவர்களின் தபால் தலை வெளியிடப்பட்டது.

Categories

Tech |