Categories
மாநில செய்திகள்

ஜாக்டோ ஜியோ: ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்… வெளியான அதிரடி உத்தரவு….!!!

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கான பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு பணிகளை நாளைக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்டவற்றில் முன்னுரிமை வழங்கி நாளைக்குள் அந்த கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காலமும் பணிக்காலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென கல்வி இயக்குனர் அறிவொளி உத்தரவிட்டுள்ளார்.

கடந்து 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு மாறுதல் அடைந்து ஆசிரியர்களுக்கு பதிலாக மற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் போராட்டம் நடத்தியவர்களுக்கு தற்போது முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |