ஜவுளி பூங்கா அமைப்பதற்கு 2.50 கோடி நிதி உதவி வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இருக்கும் ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளி பூக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் விதமாக உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க முன் வருபவர்களுக்கும் 2.50 கோடி வரை நிதி உதவி தமிழக அரசு வழங்குகின்றது. குறைந்தபட்சமாக மூன்று தொழிற்கூடங்களுடன் இரண்டு ஏக்கர் நிலத்தில் அமைக்க வேண்டும்.
மேலும் சிறிய ஜவுளி பூங்காவின் அமைப்பு நிலம், உட்கட்டமைப்பு வசதிகள், ஆய்வுக்கூடம் உள்ளிட்ட உட்பிரிவுகளை கொண்டதாக இருக்க வேண்டும். இதில் பயன்பெற விரும்புவோர் மண்டல துணை இயக்குனர், துணி நூல் துறை, சங்ககிரி சாலை, குகை, சேலம்-6 என்ற அலுவலகத்தையும் [email protected] என்ற இணையதள முகவரியையும் அணுகலாம் என வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கூறியுள்ளார்.