ஜம்மு காஷ்மீரில் இன்று காலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று காலை 6 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஹன்லி பகுதியில் இருந்து வடமேற்கில் 51 கிமீ தொலைவில் உணரப்பட்டது. மேலும் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது.
அதுமட்டுமன்றி நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கியதால் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.