ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஏற்பட்ட துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக ரகசிய தகவல் ஒன்று பாதுகாப்பு படையினருக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் குறிப்பிட்ட அந்த இடத்தை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். உடனே அதனை சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினார்கள். இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியின் அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.