Categories
உலக செய்திகள்

ஜமால் கசோகியின் முன்னாள் வழக்கறிஞருக்கு…. சிறை தண்டனை விதிப்பு…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!

சவுதியின் புகழ் பெற்ற பத்திரிகையாளராக விளங்கியவர் ஜமால் கசோகி. இவர் அமெரிக்க நாட்டின் பிரபல பத்திரிகையில் சவுதி அரசையும், அதன் மன்னர் மற்றும் இளவரசர்களை விமர்சித்து ஆங்கிலத்திலும், அரபு மொழியிலும் கட்டுரை எழுதிவந்தார். கடந்த 2018ம் வருடம் இவர் அக்டோபர் மாதம் துருக்கி இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரகத்திற்கு சென்ற போது மிகக்கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த  கொலையானது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து சவுதி பட்டத்து இளவரசர் முகமதுபின் சல்மானின் உத்தரவின் அடிப்படையிலேயே கசோகி படுகொலை செய்யப்பட்டதாக துருக்கி பகிரங்க குற்றம்சாட்டியது.

எனினும் சவுதி அரேபியா அரசு அதனை திட்டவட்டமாக மறுக்கிறது. இதனிடையில் கொலை செய்யப்பட்ட ஜமால் கசோகியின் வழக்கறிஞராக செயல்பட்டு வந்தவர் ஆசிம் கஃபீர் ஆவார். இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர் ஆவார். இதில் ஆசிம்கஃபீர் பண மோசடியிலும், வரி மோசடியிலும் ஈடுபட்டதாக ஐக்கியஅரபு அமீரகத்தில் கைதானார். இந்த நிலையில் இவ்வழக்கு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. அதனை தொடர்ந்து இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் பணமோசடி மற்றும் வரிமோசடியில் ஈடுபட்டதாக ஆசிம் கஃபீருக்கு 3 வருடங்கள் சிறைதண்டனையும், 8.16 லட்சம் அமெரிக்க டாலரும் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பின் அவர் ஐக்கியஅரபு அமீரகத்திலுள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

Categories

Tech |