Categories
உலக செய்திகள்

ஜப்பான் முன்னாள் பிரதமரை சுட்டு கொன்ற நபர்…. எதற்காக தெரியுமா?… பரபரப்பு வாக்குமூலம்…..!!!!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோஅபே. இவர் கடந்த 2012-2020 வரை ஜப்பானின் பிரதமராக பணிபுரிந்தார். இந்த நிலையில் அந்த நாட்டின் நரா எனும் நகரத்தில் நடந்த பொதுநிகழ்ச்சி ஒன்றில் ஷின்சோஅபே கலந்துகொண்டார். அதாவது சாலை பகுதியில் நடந்த அந்நிகழ்ச்சியில் அபே பேசிக்கொண்டிருந்தபோது அவர் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அபே மீது சுட்டார்.

இதனால் அபேவின் முதுகுப் பக்கத்தில் துப்பாக்கிகுண்டு பாய்ந்தது. இதன்  காரணமாக அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதையடுத்து அங்கு பணியிலிருந்த பாதுகாப்பு படையினர் ஷின்சோ அபேயை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ஷின்சோ அபேக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தது.

அந்த கூட்டத்தில் சாம்பல் நிற உடையணிந்து கொண்டு நின்ற யமகாகி என்ற அந்நபர், ஷின்சோ அபேவை 2 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. பின் அபேவைத் தாக்கிய நபரை பிடித்து இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது முதற்கட்ட விசாரணையில் ஷின்சோ அபேவின் செயல்களால், நான் அதிருப்தி அடைந்ததால், அவரை கொல்ல முடிவெடுத்து சுட்டுகொன்றதாக யமகாகி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

 

 

Categories

Tech |