அரியானா மாநிலத்தை சேர்ந்த நடிகையும் பாரதிய ஜனதா மகளிர் அணி நிர்வாகியுமான சோனாலி போகத் (42) கோவாவில் கடந்த 22 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில்,அவரது உதவியாளர்கள் இரண்டு பேர் உள்ளிட்டு ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.சோனாலி அதிகளவு போதைப்பொருள் பயன்படுத்தி உள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அவரின் மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக சோனாலி மகள் கூறுகையில்,தற்போது கோவா போலீசார் நடத்தி வரும் விசாரணையில் எங்கள் குடும்பத்தினருக்கு திருப்தி இல்லாததால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அரியானா முதல் மந்திரி கூறினார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.கோவாவில் கிட்டத்தட்ட ஒரு வாரம் சூட்டிங் இருக்கும் என்று அம்மா சொன்னார். ஆனால் இரண்டு நாட்களுக்கு மட்டுமே ரிசார்ட் முன்பதிவு செய்யப்பட்டது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆகவே இது ஒரு திட்டமிட்ட கொலை என்று தெரிவதாக அதிர்ச்சி தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.