சோதனை சாவடி அருகே காட்டு யானை உலா வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் பகுதியில் இருக்கும் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு தினமும் லாரிகள் தாளவாடியில் இருந்து சென்று வருகிறது. இந்நிலையில் காரப்பள்ளம் வன சோதனை சாவடி அருகே இருக்கும் உயர தடுப்பு கம்பி வழியாக லாரிகள் செல்கின்றன. அப்போது அதிக கரும்பு துண்டுகள் உயர தடுப்பு கம்பியில் உரசி சாலையில் ஆங்காங்கே சிதறி கிடக்கிறது.
நேற்று மாலை ஒற்றை யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையில் கிடந்த கரும்பு துண்டுகளை தின்றது. இதனை அடுத்து அந்த யானை அங்கும் இங்கும் உலா வந்ததால் சாலையின் இரு புறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. சிறிது நேரம் கழித்து யானை வனப்பகுதிக்குள் சென்றதால் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.